தற்போதைய நிலையில், ஊடகத்துறை முகம்கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்காக சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் சமாதானத்திற்கான வர்த்தகக் கூட்டமைப்பின் (ஆகஅ) நிர்வாகக்குழுவுக்குமிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
சுதந்திர ஊடக இயக்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. ஊடக அடக்கு முறை தொடர்பாக அரசியல் கட்சிகள் வர்த்தக சமூகம் உட்பட பொதுமக்களை தெளிவுபடுத்தும் ஒரு படி நிலையாகவே இது அமைந்தது.
பொதுமக்கள் முகம் கொடுத்துள்ள பாதுகாப்பற்ற நிலைக்கு தீர்வுகளைத் தேடுவதற்கு வர்த்தகச் சமூகத்தினை உள்வாங்கிக் கொள்வது இச்சந்திப்பின் நோக்கமாகும். இதன் போது கருத்து தெரிவித்த சுதந்திர ஊடக இயக்கத்தின் பிரதிநிதி சுனந்த தேசப்பிரிய,
கடந்த சில மாதங்களினுள் ஊடகவியலாளர்கள் தாக்கப்படல், கடத்தப்படல் மற்றும் அச்சுறுத்தப்படுதல் போன்ற நிகழ்வுகளின் மூலம் எல்லா ஊடக அமைப்புகளும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. அவசரகாலச் சட்டத்தினைப் பயன்படுத்திக் கொண்டு அரசு ஊடகவியலாளர்களை அடக்குவதனால் அதிகமான ஊடகவியலாளர்கள் நாட்டினைவிட்டு வெளியேறுகின்ற பிரச்சினையை முகங்கொடுக்கவேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த சமாதானத்திற்கான வர்த்தகக் கூட்டமைப்பானது (BPA),
இவ்வாறான நிலைக்கு தீர்வு தேடக்கூடியதாக இருப்பது தனித்தனியாக அன்றி ஒன்றிணைந்து செயற்படுவதின் ஊடாகவேயாகும் என்பதாக அமைந்தது.
இந்நிகழ்வுக்கு சமாதானத்திற்கான வர்த்தகக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் எச்.டி.விஜேயநந்தன மற்றும் பொதுச்செயலாளர் திருமதி.மெனிக்மென்டிஸ் உள்ளிட்ட, நிர்வாகக்குழு உறுப்பினர்களின் ஒரு பிரிவினரும் சுதந்திர ஊடக இயக்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையல் சில ஊடகவியலாளர்களும் பங்குப்பற்றினர்.