கல்கிசை நீதிவான் நீதிமன்றத்துக்கு கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளருடன் வந்த முதலமைச்சரின் மெய்ப்பாதுகாவலர்கள் நால்வரையும் ஆயுதங்களுடன் நீதிமன்றத்தினுள் செல்வதற்கு பொலிஸார் தடை விதித்தனர்.
கந்தையா ரவிராஜ் என்ற கோண்டாவிலைச்சேர்ந்த நபர் பற்றரிகளை யாழ்ப்பாணத்துக்கு கடத்திச்செல்ல முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு விமானப் படையினரால் கைது செய்யப்பட்டு கல்கிசை நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்த சந்தேக நபரை பிணையில் எடுப்பதற்காக முதலமைச்சரின் செயலாளர் மெய்ப்பாதுகாவலர்களுடன் நீதிமன்றம் வந்துள்ளார்.
அதன் போதே இச்சம்பவம் இடம் பெற்றது. நான்கு மெய்ப் பாதுகாவலர்களும் தமது துப்பாக்கிகளை வாகனத்தில் வைத்து விட்டே நீதிமன்றத்திற்குள் வந்தனர்.