Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, July 31, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
மக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றியதை எதிர்த்தோருக்கு வெள்ளைவான் அச்சுறுத்தல்
[31 - July - 2008] [Font Size - A - A - A]
*சாடுகிறார் ரவூப் ஹக்கீம்

நீதிமன்ற தடை உத்தரவுடன் வந்து வீடுகள் உடைக்கப்படுவதற்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்த தமது இரு மாகாண சபை உறுப்பினர்களை வெள்ளை வான் மூலம் கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மக்களை அடித்துவிரட்டி காணிகளை அபகரிக்க முனையும் இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவதற்கான வேலையை இந்த மாகாண சபை தேர்தல் மூலம் முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

ஹெம்மாத்தகம நகரில் கடந்த 29 ஆம் திகதி மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.

நடைபெறவுள்ள சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிடும் உசைன் அஹமட் உட்பட பல வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற இக்கூட்டத்தில் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

இந்த அரசாங்கம் மிகப் படுமோசமான முறையில் சிறுபான்மை இனங்களை நடத்துகின்றது என்றே சகலரினாலும் கருதப்படுகிறது. இதற்கு நிறைய உதாரணங்களை காணலாம்.

இரு வாரங்களுக்கு முன் கொம்பனித்தெரு பகுதியில் ஆயிரம் குடும்பங்களை அவர்களது சிறு சிறு வீடுகளில் இருந்து பலவந்தமாக அகற்றவும் வீடுகளை உடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சார்க் மகாநாட்டுக்கு வரும் தலைவர்களை பாதுகாப்பதற்காக என்று கூறி இந்த அடாவடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட எமது கட்சி மாநகர சபை உறுப்பினர்களை தேடி வெள்ளை வான் வருவதாகவும் சொந்த வீடுகளில் இருக்க முடியாதிருப்பதாகவும் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள். இதுதான் இன்று நாட்டில் காணப்படும் நிலைமை. நீதிமன்ற தடை உத்தரவுடன் வந்து வீடுகளை உடைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக இன்று வெள்ளை வானில் வந்து மாநகர சபை உறுப்பினர்களையும் கடத்திச் செல்ல முயற்சிக்கப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு அரசாங்கமாகவே இன்று இந்த அரசாங்கம் அமைந்திருக்கிறது. ஒரு இடத்தில் மட்டுமன்றி இன்று எல்லா இடத்திலும் இந்த நோய் பரவியிருக்கிறது.

இத்தேர்தலில் இவ்வரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலையை நாம் அனைவரும் செய்து முடிக்க வேண்டும். அரசாங்கத்துடன் இன்று ஒட்டிக்கொண்டிருக்கும் "சேவல்' கட்சிக்காரர்கள் இதனை செய்ய முடியாது. அமைச்சர் தொண்டமானும் நானும் இரண்டு சமூகங்களின் அரசியற் தலைவர்கள். எமக்கிடையில் தனிப்பட்ட வகையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால், இன்னொருவருடைய குளத்தில் மீன்பிடிக்கின்ற வேலை ஒரு விபரீதமான விளையாட்டு. இந்த விளையாட்டுக்குள் நாம் பலிபோய்விடக்கூடாது.

எனவே, நாம் விவேகமாக நடந்துகொள்ள வேண்டும். இந்த விவேகத்துடன் எங்களை ஏமாற்ற நினைக்கும் அரசாங்கத்துக்கு இத்தேர்தலில் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும். இத்தேர்தலின் மூலமாக ஜனாதிபதியையும் முழு அரசாங்கத்தையும் வீழ்த்துகின்ற முதலாவது பேரிடியான அடியை நிச்சயமாக கொடுக்க வேண்டும். வழங்கப்படுகின்ற பணத்துக்கு அடிமையாகவோ செய்யப்போவதாக கூறுகின்ற அபிவிருத்தி வேலைகளுக்காகவோ மயங்கவோ கூடாது. இவை யாவும் இத்தேர்தல் காலத்தில் மட்டுமே. எனவே, இது குறித்தும் இப்பகுதி மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.

இன்று அநுராதபுர மாவட்டத்தில் பாரிய மாற்றங்களை நாம் காண்கிறோம். அங்கு பல இடங்களில் அரசாங்க அமைச்சர்களுக்கு மக்கள் தடைவிதித்திருக்கிறார்கள். மின்சாரம் இன்றி ஊருக்குள் வரவேண்டாம் என்று தடுக்கிறார்கள். கிழக்கில் எமக்கு எதிராக செய்தது போன்று இங்கும் வன்முறை, அடாவடித்தன அரசியல் செய்யலாம் என்று முயற்சிக்கிறார்கள். ஆனால், இனிமேல் இதற்கு இடமளிக்க முடியாது.

Email this page Your Opinion Print this page
இந்திய, பாகிஸ்தான் தலைவர்கள் நாளை வருகை
சார்க் உச்சி மாநாட்டு பாதுகாப்புக்காக நாளை முதல் ஞாயிறு வரை குடாநாட்டுக்கான பயணிகள் விமானசேவை இடைநிறுத்தம்
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொய்ராலாவை அனுப்ப நேபாளக் கட்சிகள் இணக்கம்
அரசியலுக்கே ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிப்பதில்லை
"யுத்தத்தை தோற்றுவித்தோரே சமாதானத்தை உருவாக்க வேண்டும்'
மீனவர் பிரச்சினை தீர்வுக்கு கொழும்பு செல்லும் இந்திய பிரதமர் அழுத்தம் கொடுக்கவேண்டும்
சார்க்கின் புதிய அவதானிகளாக அவுஸ்திரேலியா, மியான்மார்
சார்க் மகாநாட்டால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மையை அரசால் பட்டியலிட முடியுமா?
தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை முழுமையாக அமுலாகும் சாத்தியம் இல்லை
கூட்டமைப்பு எம்.பி. கனகசபையின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு
வடபகுதி மோதலில் 4 படையினர் பலி
தொண்டமானுக்கு ஜனாதிபதி மன்னிப்பு
மக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றியதை எதிர்த்தோருக்கு வெள்ளைவான் அச்சுறுத்தல்
இரணைமடுப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
சட்டவிரோத குடியிருப்புகளை எந்த நேரத்திலும் அகற்றும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது
சார்க் மாநாட்டுக்கு புறம்பாக இந்திய பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பது தொடர்பாக எதுவும் தெரியாது
அமைச்சர்கள் குழு மடுவுக்கு விஜயம் ஆயர் இல்லத்தில் திருச்சொரூபத்தை வழிபட்டனர்
கல்கிசை பகுதியில் தீவிர தேடுதல்
நீதிமன்றம் வந்த மெய்ப்பாதுகாவலர்கள்
சுதந்திர ஊடகஅமைப்பின் பிரதிநிதிகள் வர்த்தக கூட்டமைப்பினருடன் சந்திப்பு
தப்பிவந்த கடற்படை வீரர் பொலிஸாரால் கைது
சிறைக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் குற்றச்செயல்களை தடுக்க அனைவரும் முன்வரவேண்டும்
குருவிட்டவில் மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு
மாவிட்டபுரம் தேர் உற்சவத்தை முன்னிட்டு தெல்லிப்பழை சோதனைச் சாவடியில் கருமபீடம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்
வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கையால் விவசாயிகள், மாணவர்கள் பெரிதும் பாதிப்பு
சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு இராணுவ வீரருக்கு 14 வருட கடுங்காவல் சிறை
ஆட்டோவில் பயணித்த இருவர் சுட்டுக் கொலை
கரையோர ரயில்களில் சோதனைகள்
நாளை பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை
படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டும் தேசிய வனத்தில் வேட்டைக்காரர் அதிகரிப்பு
பிபிலை,மெதகமவில் அசுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுவதாக விசனம்
உரியவரின் பெயர், முகவரியில்லாத சிம் அட்டைகள் கல்முனை பிரதேசத்தில் பொலிஸாரால் பறிமுதல்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை 2,03,819 மாணவர்கள் தோற்றவுள்ளனர்
படைத்தளபதியாகவிருந்த போது முறைகேடாக பணம் உழைத்திருந்தால் சகல இடங்களிலும் வீடு வாங்கியிருப்பேன்
வடக்கு கிழக்கு கிராமசேவையாளர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரிக்கை
தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக்கூடாது
மூன்று சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதன் மூலமே கிழக்கு மாகாணத்தில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும்
சார்க் மகாநாட்டின் மூலம் வறிய மக்கள் பயன்பெறும் திட்டமாகவே சார்க் கிராமம் அமைந்துள்ளது
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட வாய்ப்பிருந்தாலே நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்
அரசியல் ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சமூகமாக மலையக சமூகம் மாற்றமடைய வேண்டும்
முகத்துவாரம் சங்கமத்தில் இந்துக்கள் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற அனுமதி
சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கெதிராக சுற்றிவளைப்புக் குழுக்கள் அதிகரிப்பு
கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீண்டும் திறக்குமாறு ஜே.வி.பி. அரசிடம் கோரிக்கை
தனிநபர் விடும் தவறு ஒரு நிறுவனத்தையே தோல்விக்கு இட்டுச்செல்வதை விளக்கும் படம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com