Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, July 31, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை முழுமையாக அமுலாகும் சாத்தியம் இல்லை
[31 - July - 2008] [Font Size - A - A - A]
*"எதிர்பார்ப்புகளை மழுங்கடித்திருக்கும் அரசியல் பதற்றங்கள்'

கொழும்பில் இந்தவார இறுதியில் சந்திக்கும் தெற்காசியத் தலைவர்கள் வர்த்தக ரீதியான பிணைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்தாலோசனைகளை மேற்கொள்ளவிருக்கின்ற போதிலும் பிராந்தியத்தில் எழுந்துள்ள அரசியல் மற்றும் ஏனைய பதற்ற நிலைமைகளால் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை விரைவில் அமுல்படுத்தப்படுவதற்கான எதிர்பார்ப்புகள் குறைவாகவே காணப்படுவதாக பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.

சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பான யோசனையை சார்க் அமைப்பு 1995 இலேயே முதற் தடவையாக வெளியிட்டது. ஆனால், அந்த யோசனை அதிகளவுக்கு வெறும் காகிதத்திலேயே மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கின்றது. இதற்குப் பதிலாக சார்க் உறுப்பு நாடுகள் இருதரப்பு விடயங்களை கையாள்வதிலேயே கவனத்தை செலுத்துகின்றன. எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாகும் உச்சிமாநாட்டின் போதும் பிராந்திய பொருளாதார ஒருங்கிணைப்பு தொடர்பாக தலைவர்கள் அதிகளவுக்கு நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியம் அருகியே காணப்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சார்க்கின் பொருளாதார நிகழ்ச்சி நிரலை அரசியல் பணயம் வைத்துவிட்டதாக எச்.எஸ்.பி.சி.யின் பொருளியலாளர் அர்ஜுனா மகேந்திரன் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான பகைமையை சார்க் அமைப்பானது பணயம் வைத்திருப்பதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

காபூலில் இந்தியத் தூதரகத்தின் மீதான தாக்குதலில் பாகிஸ்தானின் சக்திகளே பின்னணியில் இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளமை மற்றும் எல்லையில் இருதரப்பும் மோதலை மீண்டும் ஆரம்பித்திருப்பதும் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

"பதற்றம் தணிவதிலும் பார்க்க அதிகரித்து செல்வதையே காணமுடிகிறது' என்று மகேந்திரன் கூறியுள்ளார்.

பிராந்திய சுதந்திர வர்த்தகப் பிரச்சினை, பொது நாணயத்தை புழக்கத்திலீடுபடுத்துவதற்கான சாத்தியம் என்பன குறித்து சார்க் தலைவர்கள் ஆராயவுள்ளனர்.

தெற்காசிய சுதந்திர வர்த்தகப் பகுதி உடன்படிக்கையானது (சப்ரா) 2012 இல் சகல உற்பத்திகளுக்கும் வரி இல்லாமல் செய்வதை நோக்கமாக கொண்டதாகும். 2004 ஜனவரியில் இது கைச்சாத்திடப்பட்டது. 2006 ஜூலை தொடக்கம் இந்த உடன்படிக்கை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

ஆனால், பிராந்தியத்தின் 150 கோடி மக்களுக்கு உறுதியளிக்கப்பட்டதன் பிரகாரம் பொருளாதார ரீதியான அனுகூலங்களை வழங்க இந்த உடன்படிக்கை தவறிவிட்டது.

தீர்வைச் சலுகைகள் தொடர்பான சச்சரவுகளால் குறிப்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான பிணக்குகளால் பிராந்திய மட்டத்திலான வர்த்தகம் மிகத் தாழ்ந்த மட்டத்திலேயே உள்ளது என்று பொருளியலாளர்கள் கூறுகின்றனர்.

சார்க்கின் பொருளாதாரம் காலக்கிரமத்தில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. ஆனால், பிராந்தியமட்டத்திலான பரஸ்பர வர்த்தகம் கணிசமான அளவுக்கு முன்னேற்றம் காண்பதில் தோல்வி கண்டுவிட்டது என்று கொள்கைகள் கற்கைகள் நிறுவனத்தின் பொருளியலாளரும் இலங்கையின் புத்திஜீவிகளில் ஒருவருமான தேஷால் டி மெல் கூறியுள்ளார்.

சார்க்கில் பாரிய சந்தையாக இந்தியா உள்ளது. ஆனால், போட்டித்தன்மையை அனுமதிப்பதில் அவர்கள் மெத்தனப்போக்கைக் கடைப்பிடிக்கின்றனர். பதிலாக இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்கின்றது என்றும் தேஷால் டி மெல் கூறியுள்ளார்.

கிட்டிய வருங்காலத்தில் "சுதந்திர வர்த்தகப் பகுதி' விடயங்கள் மேம்படுமென எதிர்பார்க்க முடியாது என்று அர்ஜுனா மகேந்திரன் தெரிவித்தார். உதாரணமாக இந்தியா சிங்கப்பூருடன் இருதரப்பு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதுடன் ஆசியான் அமைப்புடன் வர்த்தகத்தை விரிவுபடுத்த எதிர்பார்த்திருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

Email this page Your Opinion Print this page
இந்திய, பாகிஸ்தான் தலைவர்கள் நாளை வருகை
சார்க் உச்சி மாநாட்டு பாதுகாப்புக்காக நாளை முதல் ஞாயிறு வரை குடாநாட்டுக்கான பயணிகள் விமானசேவை இடைநிறுத்தம்
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொய்ராலாவை அனுப்ப நேபாளக் கட்சிகள் இணக்கம்
அரசியலுக்கே ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிப்பதில்லை
"யுத்தத்தை தோற்றுவித்தோரே சமாதானத்தை உருவாக்க வேண்டும்'
மீனவர் பிரச்சினை தீர்வுக்கு கொழும்பு செல்லும் இந்திய பிரதமர் அழுத்தம் கொடுக்கவேண்டும்
சார்க்கின் புதிய அவதானிகளாக அவுஸ்திரேலியா, மியான்மார்
சார்க் மகாநாட்டால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மையை அரசால் பட்டியலிட முடியுமா?
தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை முழுமையாக அமுலாகும் சாத்தியம் இல்லை
கூட்டமைப்பு எம்.பி. கனகசபையின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு
வடபகுதி மோதலில் 4 படையினர் பலி
தொண்டமானுக்கு ஜனாதிபதி மன்னிப்பு
மக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றியதை எதிர்த்தோருக்கு வெள்ளைவான் அச்சுறுத்தல்
இரணைமடுப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
சட்டவிரோத குடியிருப்புகளை எந்த நேரத்திலும் அகற்றும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது
சார்க் மாநாட்டுக்கு புறம்பாக இந்திய பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பது தொடர்பாக எதுவும் தெரியாது
அமைச்சர்கள் குழு மடுவுக்கு விஜயம் ஆயர் இல்லத்தில் திருச்சொரூபத்தை வழிபட்டனர்
கல்கிசை பகுதியில் தீவிர தேடுதல்
நீதிமன்றம் வந்த மெய்ப்பாதுகாவலர்கள்
சுதந்திர ஊடகஅமைப்பின் பிரதிநிதிகள் வர்த்தக கூட்டமைப்பினருடன் சந்திப்பு
தப்பிவந்த கடற்படை வீரர் பொலிஸாரால் கைது
சிறைக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் குற்றச்செயல்களை தடுக்க அனைவரும் முன்வரவேண்டும்
குருவிட்டவில் மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு
மாவிட்டபுரம் தேர் உற்சவத்தை முன்னிட்டு தெல்லிப்பழை சோதனைச் சாவடியில் கருமபீடம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்
வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கையால் விவசாயிகள், மாணவர்கள் பெரிதும் பாதிப்பு
சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு இராணுவ வீரருக்கு 14 வருட கடுங்காவல் சிறை
ஆட்டோவில் பயணித்த இருவர் சுட்டுக் கொலை
கரையோர ரயில்களில் சோதனைகள்
நாளை பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை
படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டும் தேசிய வனத்தில் வேட்டைக்காரர் அதிகரிப்பு
பிபிலை,மெதகமவில் அசுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுவதாக விசனம்
உரியவரின் பெயர், முகவரியில்லாத சிம் அட்டைகள் கல்முனை பிரதேசத்தில் பொலிஸாரால் பறிமுதல்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை 2,03,819 மாணவர்கள் தோற்றவுள்ளனர்
படைத்தளபதியாகவிருந்த போது முறைகேடாக பணம் உழைத்திருந்தால் சகல இடங்களிலும் வீடு வாங்கியிருப்பேன்
வடக்கு கிழக்கு கிராமசேவையாளர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரிக்கை
தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக்கூடாது
மூன்று சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதன் மூலமே கிழக்கு மாகாணத்தில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும்
சார்க் மகாநாட்டின் மூலம் வறிய மக்கள் பயன்பெறும் திட்டமாகவே சார்க் கிராமம் அமைந்துள்ளது
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட வாய்ப்பிருந்தாலே நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்
அரசியல் ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சமூகமாக மலையக சமூகம் மாற்றமடைய வேண்டும்
முகத்துவாரம் சங்கமத்தில் இந்துக்கள் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற அனுமதி
சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கெதிராக சுற்றிவளைப்புக் குழுக்கள் அதிகரிப்பு
கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீண்டும் திறக்குமாறு ஜே.வி.பி. அரசிடம் கோரிக்கை
தனிநபர் விடும் தவறு ஒரு நிறுவனத்தையே தோல்விக்கு இட்டுச்செல்வதை விளக்கும் படம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com