Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Thursday, July 31, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
அரசியலுக்கே ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிப்பதில்லை
[31 - July - 2008] [Font Size - A - A - A]
*சப்மா மாநாட்டில் அமைச்சர் யாப்பா கவலை

எம்.ஏ.எம்.நிலாம்

ஊடகத்துறை இன்று அரசியலிலேயே அதிகளவு கவனத்தை செலுத்துவதாகவும் அபிவிருத்தி சம்பந்தமான விடயங்கள் பாரதூரமான முறையில் புறக்கணிக்கப் படுவதாகவும் ஊடக, தகவல்துறை அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கவலை தெரிவித்தார்.

தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பின் (சப்மா) நான்காவது மாநாட்டை நேற்று புதன்கிழமை பிற்பகல் கொழும்பு ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் வைபவ ரீதியாக ஆரம்பித்துவைத்து உரையாற்றிய அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா, அதிகளவுக்கு அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் மக்களுக்கு அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் விடயங்கள் மற்றும் சந்தர்ப்பங்கள், அவர்களின் பிள்ளைகளின் சிறப்பான எதிர்காலம் குறித்த விடயங்களுக்கு அதிகளவு முக்கியத்துவம் வழங்காத தன்மை காணப்படுவதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

அமைச்சர் யாப்பா தமதுரையில் மேலும் கூறியதாவது;

அமைவிடம் மற்றும் தொழில் என்ற இரு விடயங்களால் நாம் இங்கு ஒன்றுபட்டுள்ளோம். மொழி, கலாசாரம், இனம், மத நம்பிக்கை என்ற வேறுபாடுகளுக்கு அப்பால் நாம் யாவரும் தெற்காசியர்கள். உலகில் வேறெங்கும் இல்லாத வகையில் நாம் ஒரேவிதமான தன்மையைக் கொண்டிருக்கிறோம்.

"ஊடகம்' என்று அழைக்கப்படும் பரந்த விடயத்துடன் நாம் யாவரும் இணைந்திருக்கிறோம். எமது பணிகள், கரிசனைகள், அச்சங்கள், நம்பிக்கைக்கான காரணம் என்று வரும்போது வேறுபட்ட விடயங்கள் மேலெழுந்து வருகின்றன.

தெற்காசியர்களாகிய எம்மிடம் பொதுவான தன்மைகள், கலாசார, பூகோள, வரலாற்று, பொருளாதார ரீதியாக பகிர்ந்துகொள்ளும் கரிசனைகள் உள்ளன. இவை பங்குடமையை ஏற்படுத்துகின்றன. எமது பிராந்தியத்தில் சுற்றாடல் தொடர்பான கரிசனைகள், வறுமை, அரசியல் குழப்பங்கள் பயங்கரவாதத் தாக்குதல்களால் அதிகரித்துவரும் அச்சுறுத்தல்கள் போன்றவற்றை நாம் கொண்டிருந்தாலும் ஜனநாயக கோட்பாடுகளில் பற்றுறுதியுடன் இருப்பதுடன் எமது மக்களுக்கு சிறப்பான சந்தர்ப்பங்களை வழங்குவதற்கான ஆற்றலை விருத்தி செய்து வருகின்றோம்.

இன்று இலங்கையில் எமது ஜனநாயகத்துக்கும் பிரஜைகளுக்கும் அரச, தனியார் உடமைகளுக்கும் எமது வாழ்க்கை முறைமைக்கும் உலகிலேயே மிக மோசமான பயங்கரவாத இயக்கமான புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதுவரை அதிகாரத்துக்காக மக்களை தெரிவு செய்கின்றோம். அதிகாரத்திலிருந்து நீங்கவும் வாக்களிக்கின்றோம். இலவச சுகாதார பராமரிப்பு, இலவசக்கல்வி மற்றும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துவருகின்றோம்.

இன்று முன்னாள் பயங்கரவாதி ஆயுதங்களை கைவிட்டு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராகியுள்ளார். இன்று புலிகள் மட்டுமே தனிநாடு பற்றிக் கதைக்கின்றனர். பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்று நாம் கூறுகின்றோம். தமிழ் மக்களினதும் ஏனைய சமூகங்களினதும் நியாயபூர்வமான துன்பங்களுக்கு தீர்வு காண நாம் தயாராக உள்ளோம்.

விவாதம், கலந்தாலோசனை, பிரதிநிதித்துவம், வெளிப்படைத்தன்மை, பதிலளிக்கும் கடப்பாடு போன்ற ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையில் நீதியை வழங்கவும் நீடித்த சமாதானத்தை ஏற்படுத்தவும் தயாராகவுள்ளோம். இந்த விடயங்களில் ஊடகம் முக்கியமான பங்களிப்பினை வழங்கியுள்ளது.

இதேவேளை, அபிவிருத்தி குறித்து ஊடகங்கள் அதிகளவுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அத்துடன், தெற்காசிய செய்தி முகவர் நிலையத்தை உருவாக்க வேண்டுமென்றே யோசனையையும் நான் முன்வைக்கின்றேன். இதற்கான அடித்தளத்தை சப்மா இட்டுள்ளது. எமது கதைகளை நாமே எழுதுவதற்கும் செய்தி முகவர் நிலையம் எமது மக்களுடையது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவும் இந்த தெற்காசிய செய்தி முகவர் நிலையம் வழி சமைக்கும். ஒருமைப்பாடு, மகிழ்ச்சி, பரிவு, ஞானம், இதழியல் துறை அனுபவங்களை பெற்றுக்கொள்ள வாழ்த்துகிறேன்.

Email this page Your Opinion Print this page
இந்திய, பாகிஸ்தான் தலைவர்கள் நாளை வருகை
சார்க் உச்சி மாநாட்டு பாதுகாப்புக்காக நாளை முதல் ஞாயிறு வரை குடாநாட்டுக்கான பயணிகள் விமானசேவை இடைநிறுத்தம்
கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கொய்ராலாவை அனுப்ப நேபாளக் கட்சிகள் இணக்கம்
அரசியலுக்கே ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் அபிவிருத்திக்கு முன்னுரிமை அளிப்பதில்லை
"யுத்தத்தை தோற்றுவித்தோரே சமாதானத்தை உருவாக்க வேண்டும்'
மீனவர் பிரச்சினை தீர்வுக்கு கொழும்பு செல்லும் இந்திய பிரதமர் அழுத்தம் கொடுக்கவேண்டும்
சார்க்கின் புதிய அவதானிகளாக அவுஸ்திரேலியா, மியான்மார்
சார்க் மகாநாட்டால் இலங்கைக்கு கிடைக்கும் நன்மையை அரசால் பட்டியலிட முடியுமா?
தெற்காசிய சுதந்திர வர்த்தக உடன்படிக்கை முழுமையாக அமுலாகும் சாத்தியம் இல்லை
கூட்டமைப்பு எம்.பி. கனகசபையின் மெய்ப்பாதுகாவலர் மீது துப்பாக்கிச்சூடு
வடபகுதி மோதலில் 4 படையினர் பலி
தொண்டமானுக்கு ஜனாதிபதி மன்னிப்பு
மக்களை வீடுகளிலிருந்து வெளியேற்றியதை எதிர்த்தோருக்கு வெள்ளைவான் அச்சுறுத்தல்
இரணைமடுப் பகுதியில் கடும் விமானத் தாக்குதல்
சட்டவிரோத குடியிருப்புகளை எந்த நேரத்திலும் அகற்றும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது
சார்க் மாநாட்டுக்கு புறம்பாக இந்திய பாகிஸ்தான் தலைவர்கள் சந்திப்பது தொடர்பாக எதுவும் தெரியாது
அமைச்சர்கள் குழு மடுவுக்கு விஜயம் ஆயர் இல்லத்தில் திருச்சொரூபத்தை வழிபட்டனர்
கல்கிசை பகுதியில் தீவிர தேடுதல்
நீதிமன்றம் வந்த மெய்ப்பாதுகாவலர்கள்
சுதந்திர ஊடகஅமைப்பின் பிரதிநிதிகள் வர்த்தக கூட்டமைப்பினருடன் சந்திப்பு
தப்பிவந்த கடற்படை வீரர் பொலிஸாரால் கைது
சிறைக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் குற்றச்செயல்களை தடுக்க அனைவரும் முன்வரவேண்டும்
குருவிட்டவில் மனித உரிமைகள் தொடர்பான செயலமர்வு
மாவிட்டபுரம் தேர் உற்சவத்தை முன்னிட்டு தெல்லிப்பழை சோதனைச் சாவடியில் கருமபீடம்
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்
வன்னியில் தொடரும் இராணுவ நடவடிக்கையால் விவசாயிகள், மாணவர்கள் பெரிதும் பாதிப்பு
சிறுமி பாலியல் துஷ்பிரயோக வழக்கு இராணுவ வீரருக்கு 14 வருட கடுங்காவல் சிறை
ஆட்டோவில் பயணித்த இருவர் சுட்டுக் கொலை
கரையோர ரயில்களில் சோதனைகள்
நாளை பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணை விடுமுறை
படையினரின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டும் தேசிய வனத்தில் வேட்டைக்காரர் அதிகரிப்பு
பிபிலை,மெதகமவில் அசுத்தமான குடிநீர் விநியோகிக்கப்படுவதாக விசனம்
உரியவரின் பெயர், முகவரியில்லாத சிம் அட்டைகள் கல்முனை பிரதேசத்தில் பொலிஸாரால் பறிமுதல்
க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு இம்முறை 2,03,819 மாணவர்கள் தோற்றவுள்ளனர்
படைத்தளபதியாகவிருந்த போது முறைகேடாக பணம் உழைத்திருந்தால் சகல இடங்களிலும் வீடு வாங்கியிருப்பேன்
வடக்கு கிழக்கு கிராமசேவையாளர் வெற்றிடங்களை நிரப்புமாறு கோரிக்கை
தமிழ் முஸ்லிம் சமூகங்களின் ஐக்கியத்தை சீர்குலைக்கும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இடமளிக்கக்கூடாது
மூன்று சமூகங்களும் ஒற்றுமையுடன் வாழ்வதன் மூலமே கிழக்கு மாகாணத்தில் சமாதானத்தை கட்டியெழுப்ப முடியும்
சார்க் மகாநாட்டின் மூலம் வறிய மக்கள் பயன்பெறும் திட்டமாகவே சார்க் கிராமம் அமைந்துள்ளது
ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக செயற்பட வாய்ப்பிருந்தாலே நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும்
அரசியல் ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சமூகமாக மலையக சமூகம் மாற்றமடைய வேண்டும்
முகத்துவாரம் சங்கமத்தில் இந்துக்கள் பிதிர்க்கடன்களை நிறைவேற்ற அனுமதி
சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கெதிராக சுற்றிவளைப்புக் குழுக்கள் அதிகரிப்பு
கந்தளாய் சீனித் தொழிற்சாலையை மீண்டும் திறக்குமாறு ஜே.வி.பி. அரசிடம் கோரிக்கை
தனிநபர் விடும் தவறு ஒரு நிறுவனத்தையே தோல்விக்கு இட்டுச்செல்வதை விளக்கும் படம்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com