* அகதிகளின் குறைந்தபட்ச தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாத அவலம்
வன்னியில் இடம்பெற்று வரும் படைநடவடிக்கைகளால் இடம்பெயர்ந்துள்ள பல்லாயிரக் கணக்கானோரின் பத்துவீதத் தேவையே பூர்த்தி செய்யக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் கடந்த ஒன்றரை வருடமாக இடம்பெற்று வரும் படைநடவடிக்கையால் இடம்பெயர்வோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.
மக்கள் இடம்பெயரும் வேகத்திற்கேற்ப அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, வன்னிக்கு வெளியே இருந்து கிடைக்கும் உதவிகளுக்காக காத்திருக்க வேண்டியிருப்பதாக அரச அதிகாரிகளும் நிவாரணப் பணியாளர்களும் கூறுகின்றனர்....