Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, September 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
ஊவா மாகாண சபையின் அதிகாரத்தை எதிர்வரும் தேர்தலிலும் அரசு கைப்பற்றும்
[05 - September - 2008] [Font Size - A - A - A]
* பசறை பிரதேச சபை தலைவர்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவு இல்லாமலே கடந்த 2004 ஊவா மாகாண சபைத் தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றிய பொதுஜன ஐக்கிய முன்னணி, இம்முறையும் அமோக வாக்கு வித்தியாசத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றும் என பசறை பிரதேச சபைத் தலைவர் ஆனந்த டீ.எம். சில்வா தெரிவித்தார்.

பசறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து மேலும் அவர் உரையாற்றுகையில்;

ஜனாதிபதியின் வேலைத்திட்டங்கள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதை வடமத்திய சப்ரகமுவ தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளன.

தற்பொழுது ஊவா மாகாணத்தில் தமிழ் மக்கள் செறிந்திருப்பதால் மாகாண சபையை கைப்பற்றிவிடலாமென ஐக்கிய தேசியக்கட்சியினர் கனவு காண்கின்றனர். அது ஒருபோதும் பலிக்கப்போவதில்லை. காரணம் 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸும் போட்டியிட்டது. ஆனால், பொதுஜன ஐக்கிய முன்னணியே ஊவா மாகாண சபையைக் கைப்பற்றியது.

அதேபோல் இம்முறை நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலிலும் பொதுஜன ஐக்கிய முன்னணியே கைப்பற்றும். பதுளை மாவட்டத்தில் தமிழ் மக்களின் வாக்குகள் கடந்த காலங்களைவிட இம்முறை அதிகமாக பொதுஜன ஐக்கிய முன்னணிக்கே கிடைக்கும். காரணம். அந்தளவுக்கு மலையகப் பகுதிகள் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன. கமநெகும வேலைத்திட்டத்தின் ஊடாக தோட்டப்பகுதிகளில் தற்பொழுது பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, மலையக மக்கள் பொதுஜன ஐக்கிய முன்னணிக்கே வாக்களிப்பார்கள் என்றார்.

உறுப்பினர் ஆர்.எம். திஸநாயக்க தமதுரையில்;

மக்கள் விடுதலை முன்னணியினருக்கு சப்ரகமுவ, வடமத்திய மக்கள் நல்லதொரு பாடத்தை மாகாணசபைத் தேர்தலில் புகட்டியுள்ளனர்.

ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த பேசிய வீண் பேச்சுக்கள் எல்லாம் எங்கே? எல்லாம் தவிடுபொடியாகிவிட்டது. பொலநறுவை மாவட்டத்தில் ஜே.வி.பி.யின் முக்கிய தலைவர்களும் முக்கியஸ்தர்களும் பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் இணைந்து செயல்பட்டதுடன் எமது கட்சிக்கே வாக்களித்தனர்.

தற்பொழுது பல்கலைக்கழக மாணவர்களை தூண்டிவிட்டு போராட்டங்களிலும் தேவையற்ற விடயங்களிலும் ஈடுபட வைத்து தமது அரசியலை நடத்துவதற்கு ஜே.வி.பி.யினர் முனைகின்றனர். இதனால், பல்கலைக்கழக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன் ஐந்து வருடத்தில் பெறவேண்டிய பட்டங்களை 7 வருடத்தில் பெற வேண்டிய நிலையும் மாணவர்களுக்கு ஏற்படும். இதனால், பாதிக்கப்படுவது ஜே.வி.பி.யினர் அல்ல பல்கலைக்கழக மாணவர்கள் என்பதை மாணவர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

Email this page Your Opinion Print this page
ஐ.ஈ.எல்.ரி.எஸ். பரீட்சைக்கான பதிவுகளை இலகுவாக்கியது பிரிட்டிஷ் கவுன்ஸில்
காணாமற் போனவர்கள் மீண்டும் திரும்பி வருவரென நம்பிக்கை
வன்னி அகதிகளின் நிலைமை; மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் கவலை
வடக்கில் விரைவில் தேர்தலின்பின் மாகாண சபை அரசியல் நிர்வாகம்
வன்னி மக்களின் பாதுகாப்பு, சுதந்திரமான நடமாட்டத்துக்கு இடமளிக்க வலியுறுத்தல் மனிதாபிமான அமைப்புகளின் இணையம் வேண்டுகோள்
யாழ்நகரில் மீண்டும் கொள்ளையர் அட்டகாசம்
மண்சரிவில் புதையுண்ட இரு தொழிலாளர்கள்
கிராண்ட்பாஸ் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிலைகளை அடித்து நொருக்கி அட்டகாசம்
பணவீக்கம் என்றுமில்லாதவாறு அதிகரிப்பு ஒவ்வொரு பிரஜையும் ரூபா 1,75,000 கடனாளி
இந்துக் கோவில் சுவாமி சிலைகளை உடைத்த பிக்கு மீது ஜனாதிபதி, அஸ்கிரிய பீடாதிபதிகளின் நடவடிக்கை அவசியம்
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தாக்கப்பட்டு படுகாயம், இருவர் கைது; கம்பளையில் சம்பவம்
புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமான பணியில் படையினர்
வன்னி மக்களின் பாதுகாப்பை ஐ.நா.வே உறுதிப்படுத்த வேண்டும்
தோட்டப் பகுதி வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்பது தேர்தல் பிரசாரம்
மாத்தன்னை தோட்டக் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இழுபறிநிலை; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
ஹல்தும்முல்லை நீட்வூட் பிரிவு தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது
கொட்டியாபுரப்பற்று இந்துசமய அபிவிருத்தி ஒன்றிய ஏற்பாட்டில் ஐந்து நாள் வேல் நடைப்பஜனை
மேல் மாகாண தோட்டப் பாடசாலை அபிவிருத்திக்கு 6 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு
யாழ்ப்பாணத்திற்கான பாடநூல் விநியோக ஆரம்ப வைபவம்
துப்பாக்கி தயாரிக்கும் நிலையம் கண்டுபிடிப்பு
வவுனியா வைத்தியசாலை கட்டிடத் திறப்பு விழா தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் புறக்கணிப்பு
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யுத்தத்துக்கே பெருமளவு நிதி ஒதுக்க தீர்மானம்
சடலம் அடையாளம் காணப்பட்டது
ஒரு இலட்சம் பீப்பாய் எரிபொருளை சுத்திகரிக்கும் நிலையம் ஈரான் அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும்
வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அதற்கு செல்வதற்கு பல் வைத்தியர்கள் தயாரில்லை
கிளைமோர் தாக்குதலில் படை வீரர் உயிரிழப்பு
சட்ட உதவி நிலையங்களூடாக வறிய மக்கள் நன்மையடைய முடியும்
குடாநாட்டு பாடசாலைகளுக்கு கப்பல் மூலம் இன்று 6,14,974 பாடப் புத்தகங்கள் அனுப்பப்படுகிறது
கிணற்றில் விழுந்து மாணவன் மரணம்
வலிகாமம் மேற்குப் பிரதேசத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
முகாமைத்துவ உதவியாளர் பரீட்சைக்கு தோற்றமுடியாத யாழ். பரீட்சார்த்திகள்
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்யமுடியாது
"ஹெல்பேச்' அரச சார்பற்ற நிறுவனத்தால் பாதிப்புற்றோருக்கு இலவச வைத்தியசேவை
26 வருடங்களாக கைவிடப்பட்ட காணிகளில் மீண்டும் விவசாயம் செய்ய நடவடிக்கை
நாட்டில் உருவாகியுள்ள ஆயுத கலாசாரத்தினால் மக்களுக்கிடையே ஒற்றுமையின்மை அதிகரிப்பு
ஊவா மாகாண சபையின் அதிகாரத்தை எதிர்வரும் தேர்தலிலும் அரசு கைப்பற்றும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com