Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, September 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கொட்டியாபுரப்பற்று இந்துசமய அபிவிருத்தி ஒன்றிய ஏற்பாட்டில் ஐந்து நாள் வேல் நடைப்பஜனை
[05 - September - 2008] [Font Size - A - A - A]
கொட்டியாபுரப்பற்று இந்துசமய அபிவிருத்தி ஒன்றியம் நடத்தும் வேல்நடை பஜனை செப்டெம்பர் 9 ஆம் திகதி காலை மேன்காமம் மருதநகர் ஸ்ரீமுருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி செப்டெம்பர் 13 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வெருகலம்பதி ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி கோவிலில் நிறைவுபெறும்.

பஜனை ஆரம்பத்தில் பூஜை வழிபாடு, மேன்காமம் முருகன் ஆலய அர்ச்சகர் சிவஸ்ரீ சி. ஜெயக்குமார் அருளாசி வழங்கும் நிகழ்வு இடம்பெறும். ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளரும் சமயப் பணிப்பாளருமான க.தயானந்தகுரு வேல்நடை பஜனையை ஆரம்பித்துவைப்பார்.

கிராமங்கள் தோறும் சமய விழிப்புணர்வையும் இறை நம்பிக்கையையும் ஏற்படுத்துமுகமாகவும் எமது மக்கள் தற்போது அனுபவிக்கும் துன்ப துயரங்களிலிருந்து நீங்குமுகமாகவும் வேல்நடை பஜனை ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாகவும் பஜனையில் அனைவரும் பங்குபற்றி இறைவனை வேண்டுதல் செய்யும்படி ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

செப்டெம்பர் 9 ஆம் திகதி மேன்காமம் முருகன் கோயிலிலிருந்து ஆரம்பமாகும் வேல்நடைபஜனை, அபிராமி அம்மன் கோவில், மல்லிகைத்தீவு சிவன், வீரகத்திப் பிள்ளையார் ஆலயம், பெரியவெளி கதிரேசப்பிள்ளையார் ஆலயம், மணற்சேனை தங்கமுருகன் ஆலயம் ஆகியவற்றைத் தரிசித்து பட்டித்திடல் விநாயகர் கோவிலில் நிறைவுபெறும்.

செப்டெம்பர் 10 ஆம் திகதி பாலத்தடிச்சேனை முருகன் கோவிலிலிருந்து வேல்நடை பஜனை ஆரம்பமாகி முன்னம்போடி வெட்டை சித்திவிநாயகர் கோவில், நாராயணபுரம் நாராயணர் கோவில், பாரதிபுரம் புதுமை விநாயகர் கோவில், பாரதிபுரம் பாலவிநாயகர் கோவில் பாரதிபுரம், சிவன் கோவில், கிளிவெட்டி, மாரியம்மன் கோவில் ஆகியவற்றைத் தரிசித்து தங்கநகர் சண்பகவல்லி ஆலயத்தில் தங்கும்.

செப்டெம்பர் 11 ஆம் திகதி பஜனை அரிப்பு ஞான விநாயகர் கோவிலிலிருந்து ஆரம்பமாகும். பூநகர் மாரியம்மன் ஆலயம், பூமரத்தடிச்சேனை விநாயகர் கோயில் ஆகியவற்றைத் தரிசித்த பின்னர், பஜனைக் குழுவினர் ஈச்சிலம்பற்று சண்பக நாச்சி கோவிலில் தங்குவர்.

செப்டெம்பர் 12 ஆம் திகதி விநாயகபுரம் விநாயகர் கோவிலிலிருந்து பஜனை ஆரம்பமாகும். புன்னையடி விநாயகர் கோவில், கல்லடி மலைநீலியம்மன் கோயில், வாழைத்தோட்டம் விநாயகர் கோவில் ஆகியவற்றைத் தரிசித்த பின்னர் பஜனைக் குழுவினர் வெருகல் முகத்துவாரம் சூரநகர் விநாயகர் கோயிலில் தங்குவர்.

மீண்டும் செப்டெம்பர் 13 ஆம் திகதி முத்துச்சேனை, வட்டவான், மாவடிச்சேனை ஆகிய இடங்களில் உள்ள விநாயகர் ஆலயங்களைத் தரிசித்து பின்னர் பஜனைக் குழுவினர் மாலையில் வெருகலம்பதி முருகன் ஆலயத்தினைச் சென்றடையும்.

Email this page Your Opinion Print this page
ஐ.ஈ.எல்.ரி.எஸ். பரீட்சைக்கான பதிவுகளை இலகுவாக்கியது பிரிட்டிஷ் கவுன்ஸில்
காணாமற் போனவர்கள் மீண்டும் திரும்பி வருவரென நம்பிக்கை
வன்னி அகதிகளின் நிலைமை; மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் கவலை
வடக்கில் விரைவில் தேர்தலின்பின் மாகாண சபை அரசியல் நிர்வாகம்
வன்னி மக்களின் பாதுகாப்பு, சுதந்திரமான நடமாட்டத்துக்கு இடமளிக்க வலியுறுத்தல் மனிதாபிமான அமைப்புகளின் இணையம் வேண்டுகோள்
யாழ்நகரில் மீண்டும் கொள்ளையர் அட்டகாசம்
மண்சரிவில் புதையுண்ட இரு தொழிலாளர்கள்
கிராண்ட்பாஸ் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிலைகளை அடித்து நொருக்கி அட்டகாசம்
பணவீக்கம் என்றுமில்லாதவாறு அதிகரிப்பு ஒவ்வொரு பிரஜையும் ரூபா 1,75,000 கடனாளி
இந்துக் கோவில் சுவாமி சிலைகளை உடைத்த பிக்கு மீது ஜனாதிபதி, அஸ்கிரிய பீடாதிபதிகளின் நடவடிக்கை அவசியம்
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தாக்கப்பட்டு படுகாயம், இருவர் கைது; கம்பளையில் சம்பவம்
புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமான பணியில் படையினர்
வன்னி மக்களின் பாதுகாப்பை ஐ.நா.வே உறுதிப்படுத்த வேண்டும்
தோட்டப் பகுதி வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்பது தேர்தல் பிரசாரம்
மாத்தன்னை தோட்டக் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இழுபறிநிலை; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
ஹல்தும்முல்லை நீட்வூட் பிரிவு தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது
கொட்டியாபுரப்பற்று இந்துசமய அபிவிருத்தி ஒன்றிய ஏற்பாட்டில் ஐந்து நாள் வேல் நடைப்பஜனை
மேல் மாகாண தோட்டப் பாடசாலை அபிவிருத்திக்கு 6 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு
யாழ்ப்பாணத்திற்கான பாடநூல் விநியோக ஆரம்ப வைபவம்
துப்பாக்கி தயாரிக்கும் நிலையம் கண்டுபிடிப்பு
வவுனியா வைத்தியசாலை கட்டிடத் திறப்பு விழா தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் புறக்கணிப்பு
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யுத்தத்துக்கே பெருமளவு நிதி ஒதுக்க தீர்மானம்
சடலம் அடையாளம் காணப்பட்டது
ஒரு இலட்சம் பீப்பாய் எரிபொருளை சுத்திகரிக்கும் நிலையம் ஈரான் அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும்
வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அதற்கு செல்வதற்கு பல் வைத்தியர்கள் தயாரில்லை
கிளைமோர் தாக்குதலில் படை வீரர் உயிரிழப்பு
சட்ட உதவி நிலையங்களூடாக வறிய மக்கள் நன்மையடைய முடியும்
குடாநாட்டு பாடசாலைகளுக்கு கப்பல் மூலம் இன்று 6,14,974 பாடப் புத்தகங்கள் அனுப்பப்படுகிறது
கிணற்றில் விழுந்து மாணவன் மரணம்
வலிகாமம் மேற்குப் பிரதேசத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
முகாமைத்துவ உதவியாளர் பரீட்சைக்கு தோற்றமுடியாத யாழ். பரீட்சார்த்திகள்
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்யமுடியாது
"ஹெல்பேச்' அரச சார்பற்ற நிறுவனத்தால் பாதிப்புற்றோருக்கு இலவச வைத்தியசேவை
26 வருடங்களாக கைவிடப்பட்ட காணிகளில் மீண்டும் விவசாயம் செய்ய நடவடிக்கை
நாட்டில் உருவாகியுள்ள ஆயுத கலாசாரத்தினால் மக்களுக்கிடையே ஒற்றுமையின்மை அதிகரிப்பு
ஊவா மாகாண சபையின் அதிகாரத்தை எதிர்வரும் தேர்தலிலும் அரசு கைப்பற்றும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com