Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, September 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பணவீக்கம் என்றுமில்லாதவாறு அதிகரிப்பு ஒவ்வொரு பிரஜையும் ரூபா 1,75,000 கடனாளி
[05 - September - 2008] [Font Size - A - A - A]
* சுட்டிக்காட்டுகிறது ஐ.தே.க.

-எம்.ஏ.எம்.நிலாம்-

நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபா கடனாளியாக ஆக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் முழு நாடும் பாரிய கடனுக்குள் தள்ளிவிடப்பட்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.

வரலாற்றில் முன்னொரு போதுமில்லாத வகையில் நாட்டின் பணவீக்கம் மோசமான நிலையில் அதிகரித்திருக்கின்றது. பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பணவீக்கம் 30 சதவீதமாக உயர்ந்து காணப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

இன்றைய அரசாங்கம் நாட்டை முழுமையாக கடனுக்குள் தள்ளியுள்ளது. ஏற்கனவே கோடிக்கணக்கான ரூபாவுக்கான பண முறிகள் பெறப்பட்டிருப்பதால் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலையில் காணப்படுகின்றது. வெளிநாட்டு உதவியாக 230 மில்லியன் அமெரிக்க டொலரை குறுகிய கால கடனாக பெற்றுள்ளது. இப்போது மீண்டும் 70 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகப் பெற்றுக் கொள்ளும் முயற்சியில் அரசு இறங்கியுள்ளது.

இந்தளவு பெரிய கடன்களைப் பெற்ற நிலையிலும் அரசாங்கம் பாரிய நிதி நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.அரசாங்கத்தின் சீரற்ற பொருளாதார, நிதிக் கொள்கை காரணமாக நாட்டு மக்கள் கடன்காரர்களாக்கப்பட்டுள்ளனர். 2007 ஆம் ஆண்டுக்கும் 2008 ஆம் ஆண்டுக்குமிடையில் சமையல் எரிவாயுவின் விலை ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. 2006 டிசம்பரில் 750 ரூபாவாக இருந்த சமையல் எரிவாயுவின் விலை இன்று 1863 ரூபாவாக அதிகரித்துள்ளது. வாழ்க்கைச் செலவு உயர்வை தாங்கிக் கொள்ள முடியாத இக்கட்டான நிலைக்கு நாட்டு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

இவை அனைத்துக்கும் அரசாங்கம் உலகச் சந்தையை காரணம் காட்ட முற்படுகின்றது. உலக சந்தை நிலைமை மட்டும் எமது நாட்டைப் பாதிக்கவில்லை. அரசாங்கத்தின் நிதி, பொருளாதார முகாமைத்துவம் ஒழுங்காகப் பேணப்படாமை தான் இன்றைய நிலைக்கு முக்கிய காரணமாகும்.

அரசாங்கத்தின் இயலாமையை யுத்தத்தைக் காண்பித்து மூடி மறைக்கும் முயற்சிகள் தான் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்னும் எவ்வளவு காலத்துக்கு யுத்தத்தைக் காட்டி நாட்டு மக்களை ஏமாற்ற முடியும் எனக் கேட்க விரும்புகின்றோம்.

கடந்த பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்ட எந்த உத்தரவாதமும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. அடுத்த பட்ஜெட் சமர்ப்பிக்க இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. அடுத்த நவம்பரில் எத்தகைய மாயாஜாலங்களைக் காட்டி வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்வைக்கப் போகிறார்.

பொய் வாக்குறுதிகளால் நாட்டைத் தொடர்ந்து அழிவுக்குள் இட்டுச் செல்லாமல் இயலாமையை ஏற்றுக் கொண்டு ஆட்சியிலிருந்து அரசு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் ஒன்றுபட்டு ஆட்சியைக் கவிழ்த்திவிடுவர் எனவும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

Email this page Your Opinion Print this page
ஐ.ஈ.எல்.ரி.எஸ். பரீட்சைக்கான பதிவுகளை இலகுவாக்கியது பிரிட்டிஷ் கவுன்ஸில்
காணாமற் போனவர்கள் மீண்டும் திரும்பி வருவரென நம்பிக்கை
வன்னி அகதிகளின் நிலைமை; மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் கவலை
வடக்கில் விரைவில் தேர்தலின்பின் மாகாண சபை அரசியல் நிர்வாகம்
வன்னி மக்களின் பாதுகாப்பு, சுதந்திரமான நடமாட்டத்துக்கு இடமளிக்க வலியுறுத்தல் மனிதாபிமான அமைப்புகளின் இணையம் வேண்டுகோள்
யாழ்நகரில் மீண்டும் கொள்ளையர் அட்டகாசம்
மண்சரிவில் புதையுண்ட இரு தொழிலாளர்கள்
கிராண்ட்பாஸ் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிலைகளை அடித்து நொருக்கி அட்டகாசம்
பணவீக்கம் என்றுமில்லாதவாறு அதிகரிப்பு ஒவ்வொரு பிரஜையும் ரூபா 1,75,000 கடனாளி
இந்துக் கோவில் சுவாமி சிலைகளை உடைத்த பிக்கு மீது ஜனாதிபதி, அஸ்கிரிய பீடாதிபதிகளின் நடவடிக்கை அவசியம்
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தாக்கப்பட்டு படுகாயம், இருவர் கைது; கம்பளையில் சம்பவம்
புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமான பணியில் படையினர்
வன்னி மக்களின் பாதுகாப்பை ஐ.நா.வே உறுதிப்படுத்த வேண்டும்
தோட்டப் பகுதி வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்பது தேர்தல் பிரசாரம்
மாத்தன்னை தோட்டக் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இழுபறிநிலை; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
ஹல்தும்முல்லை நீட்வூட் பிரிவு தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது
கொட்டியாபுரப்பற்று இந்துசமய அபிவிருத்தி ஒன்றிய ஏற்பாட்டில் ஐந்து நாள் வேல் நடைப்பஜனை
மேல் மாகாண தோட்டப் பாடசாலை அபிவிருத்திக்கு 6 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு
யாழ்ப்பாணத்திற்கான பாடநூல் விநியோக ஆரம்ப வைபவம்
துப்பாக்கி தயாரிக்கும் நிலையம் கண்டுபிடிப்பு
வவுனியா வைத்தியசாலை கட்டிடத் திறப்பு விழா தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் புறக்கணிப்பு
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யுத்தத்துக்கே பெருமளவு நிதி ஒதுக்க தீர்மானம்
சடலம் அடையாளம் காணப்பட்டது
ஒரு இலட்சம் பீப்பாய் எரிபொருளை சுத்திகரிக்கும் நிலையம் ஈரான் அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும்
வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அதற்கு செல்வதற்கு பல் வைத்தியர்கள் தயாரில்லை
கிளைமோர் தாக்குதலில் படை வீரர் உயிரிழப்பு
சட்ட உதவி நிலையங்களூடாக வறிய மக்கள் நன்மையடைய முடியும்
குடாநாட்டு பாடசாலைகளுக்கு கப்பல் மூலம் இன்று 6,14,974 பாடப் புத்தகங்கள் அனுப்பப்படுகிறது
கிணற்றில் விழுந்து மாணவன் மரணம்
வலிகாமம் மேற்குப் பிரதேசத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
முகாமைத்துவ உதவியாளர் பரீட்சைக்கு தோற்றமுடியாத யாழ். பரீட்சார்த்திகள்
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்யமுடியாது
"ஹெல்பேச்' அரச சார்பற்ற நிறுவனத்தால் பாதிப்புற்றோருக்கு இலவச வைத்தியசேவை
26 வருடங்களாக கைவிடப்பட்ட காணிகளில் மீண்டும் விவசாயம் செய்ய நடவடிக்கை
நாட்டில் உருவாகியுள்ள ஆயுத கலாசாரத்தினால் மக்களுக்கிடையே ஒற்றுமையின்மை அதிகரிப்பு
ஊவா மாகாண சபையின் அதிகாரத்தை எதிர்வரும் தேர்தலிலும் அரசு கைப்பற்றும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com