Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, September 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
கிராண்ட்பாஸ் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிலைகளை அடித்து நொருக்கி அட்டகாசம்
[05 - September - 2008] [Font Size - A - A - A]
* பிக்கு, இரு உதவியாளர்கள் கைது

கொழும்பு, கிராண்ட்பாஸ் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வளாகத்தினுள் நேற்று வியாழக்கிழமை அதிகாலை புகுந்த சிலர், தெய்வச் சிலைகளை உடைத்தெறிந்துள்ளனர்.

இதையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பாக கோயிலின் அருகிலுள்ள பௌத்த விகாரையைச் சேர்ந்த பிக்கு ஒருவரும் அவரது இரு உதவியாளர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது:

கிராண்ட்பாஸ் டிமெல் வத்தையிலுள்ள (கெத்தாராம விளையாட்டரங்கிற்கு அருகில்) ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதற்கான பணிகளில் ஈடுபட்டவர்கள் நள்ளிரவு 12 மணியளவில் அந்தப் பணிகளை முடித்துக் கொண்டு சென்ற பின் அதிகாலை 1.30

மணியளவில் கோயில் வளாகத்தினுள் புகுந்த மூவர் கோயிலின் சிறிய கோபுரத்தில் (விமானம்) ஏறி மூலஸ்தானத்திற்கு மேல் அமைக்கப்பட்டிருந்த தெய்வச் சிலைகளை இடித்து உடைத்ததுடன் மின் விளக்குகளையும் அடித்து நொருக்கியுள்ளனர்.

சத்தங்கள் கேட்டு அப்பகுதி இளைஞர்கள் அங்கு ஓடி வரவே, நாசவேலைகளில் ஈடுபட்டிருந்த மூவரும் அங்கிருந்து தப்பியோடி அருகிலுள்ள விகாரைக்குள் புகுந்துள்ளனர்.

கோயிலுக்குச் சென்ற இளைஞர்கள் உடனடியாக கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கும் "119' அவசரப் பொலிஸாருடனும் தொடர்பு கொண்டு இதுபற்றி தெரியப்படுத்தவே அவர்கள் அங்கு வந்துள்ளனர்.

அருகிலுள்ள விகாரையிலிருந்து வந்தவர்களே கோயில் கோபுரப் பகுதியில் தெய்வச் சிலைகளை உடைத்ததாகக் கூறிய இளைஞர்கள் அந்த இடத்திற்கு பொலிஸாரைக் கூட்டிச் சென்று காண்பித்துமுள்ளனர்.

அம்மன் சிலையின் முகமும் கைகளும் காலும் உடைக்கப்பட்டிருந்ததுடன் விஷ்ணு சிலையும், இராமர் சிலையும் உடைத்துச் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. சிவலிங்கம் உடைத்து தலை கீழாகக் கவிழ்க்கப்பட்டிருந்தது.

இளைஞர்கள் தெரிவித்த முறைப்பாட்டையடுத்து விகாரைக்கு சென்ற பொலிஸார் அங்கிருந்தவர்களை வெளியே கொண்டு வந்து விசாரித்த போது இருவர் முன்னுக்குப் பின் முரணாகக் கூறவே அவர்கள் இருவரையும் பிடித்த பொலிஸார் விகாரைப் பிக்குவிடம் சென்று இது பற்றி விசாரித்துள்ளனர். எனினும் அவர், இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாதெனக் கூறிவிட்டார்.

இவ்வேளையில் அந்தப் பிக்குவின் முதுகில் ஏற்பட்ட கீறல் காயத்திலிருந்து இரத்தம் வருவதை அவதானித்த இளைஞர்கள் பொலிஸாரிடம் அதனைக் காட்டி அவருக்கும் இதில் தொடர்பிருப்பதாகக் கூறவே அவரையும் அவரது உதவியாளர்கள் இருவரையும் கைது செய்த பொலிஸார் மூவரையும் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர்.

இதற்கிடையில் சம்பவம் பற்றி அறிந்து அவ்விடத்தில் பெருமளவு மக்கள் கூடி விட்டனர். இதுபற்றி கட்சித் தலைவர்களுக்கும் கோவில் நிர்வாகம் அறிவிக்கவே பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணன், மாநகரசபை உறுப்பினர்களான கே.ரி.குருசாமி, ஏணி எஸ்.இராஜேந்திரன், எஸ்.எம்.ஷியாம் ஆகியோர் அவ்விடத்திற்கு வந்து நிலைமைகளை அறிந்து கொண்டனர்.

மனோகணேசன் எம்.பி. இது தொடர்பாக பொலிஸ் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு நிலைமை மோசமடையாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். அப்பகுதியில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பிக்குவும் அவரது உதவியாளர்கள் இருவரும் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் ஆஜர் செய்யப்பட்டதையடுத்து அவர்கள் மூவரையும் எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் அஜித் அனவரட்ண உத்தரவிட்டுள்ளார்.

Email this page Your Opinion Print this page
ஐ.ஈ.எல்.ரி.எஸ். பரீட்சைக்கான பதிவுகளை இலகுவாக்கியது பிரிட்டிஷ் கவுன்ஸில்
காணாமற் போனவர்கள் மீண்டும் திரும்பி வருவரென நம்பிக்கை
வன்னி அகதிகளின் நிலைமை; மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் கவலை
வடக்கில் விரைவில் தேர்தலின்பின் மாகாண சபை அரசியல் நிர்வாகம்
வன்னி மக்களின் பாதுகாப்பு, சுதந்திரமான நடமாட்டத்துக்கு இடமளிக்க வலியுறுத்தல் மனிதாபிமான அமைப்புகளின் இணையம் வேண்டுகோள்
யாழ்நகரில் மீண்டும் கொள்ளையர் அட்டகாசம்
மண்சரிவில் புதையுண்ட இரு தொழிலாளர்கள்
கிராண்ட்பாஸ் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிலைகளை அடித்து நொருக்கி அட்டகாசம்
பணவீக்கம் என்றுமில்லாதவாறு அதிகரிப்பு ஒவ்வொரு பிரஜையும் ரூபா 1,75,000 கடனாளி
இந்துக் கோவில் சுவாமி சிலைகளை உடைத்த பிக்கு மீது ஜனாதிபதி, அஸ்கிரிய பீடாதிபதிகளின் நடவடிக்கை அவசியம்
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தாக்கப்பட்டு படுகாயம், இருவர் கைது; கம்பளையில் சம்பவம்
புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமான பணியில் படையினர்
வன்னி மக்களின் பாதுகாப்பை ஐ.நா.வே உறுதிப்படுத்த வேண்டும்
தோட்டப் பகுதி வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்பது தேர்தல் பிரசாரம்
மாத்தன்னை தோட்டக் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இழுபறிநிலை; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
ஹல்தும்முல்லை நீட்வூட் பிரிவு தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது
கொட்டியாபுரப்பற்று இந்துசமய அபிவிருத்தி ஒன்றிய ஏற்பாட்டில் ஐந்து நாள் வேல் நடைப்பஜனை
மேல் மாகாண தோட்டப் பாடசாலை அபிவிருத்திக்கு 6 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு
யாழ்ப்பாணத்திற்கான பாடநூல் விநியோக ஆரம்ப வைபவம்
துப்பாக்கி தயாரிக்கும் நிலையம் கண்டுபிடிப்பு
வவுனியா வைத்தியசாலை கட்டிடத் திறப்பு விழா தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் புறக்கணிப்பு
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யுத்தத்துக்கே பெருமளவு நிதி ஒதுக்க தீர்மானம்
சடலம் அடையாளம் காணப்பட்டது
ஒரு இலட்சம் பீப்பாய் எரிபொருளை சுத்திகரிக்கும் நிலையம் ஈரான் அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும்
வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அதற்கு செல்வதற்கு பல் வைத்தியர்கள் தயாரில்லை
கிளைமோர் தாக்குதலில் படை வீரர் உயிரிழப்பு
சட்ட உதவி நிலையங்களூடாக வறிய மக்கள் நன்மையடைய முடியும்
குடாநாட்டு பாடசாலைகளுக்கு கப்பல் மூலம் இன்று 6,14,974 பாடப் புத்தகங்கள் அனுப்பப்படுகிறது
கிணற்றில் விழுந்து மாணவன் மரணம்
வலிகாமம் மேற்குப் பிரதேசத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
முகாமைத்துவ உதவியாளர் பரீட்சைக்கு தோற்றமுடியாத யாழ். பரீட்சார்த்திகள்
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்யமுடியாது
"ஹெல்பேச்' அரச சார்பற்ற நிறுவனத்தால் பாதிப்புற்றோருக்கு இலவச வைத்தியசேவை
26 வருடங்களாக கைவிடப்பட்ட காணிகளில் மீண்டும் விவசாயம் செய்ய நடவடிக்கை
நாட்டில் உருவாகியுள்ள ஆயுத கலாசாரத்தினால் மக்களுக்கிடையே ஒற்றுமையின்மை அதிகரிப்பு
ஊவா மாகாண சபையின் அதிகாரத்தை எதிர்வரும் தேர்தலிலும் அரசு கைப்பற்றும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com