Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, May 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
தேர்தல் முடிவை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்; முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு
[12 - May - 2008] [Font Size - A - A - A]
* இன்று ரணில், ஹக்கீம் வெளிநாட்டு இராஜதந்திரிகளுடன் சந்திப்பு

கிழக்கில் வன்முறைகள், முறைகேடுகள் கட்டவிழ்த்து விடப்பட்ட போதிலும் தேர்தல் முடிவுகளை தாம் நிச்சயமாக தோல்வியாகவே கருதவில்லையென தெரிவித்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், வன்முறைகளும் மோசடிகளும் தாண்டவமாடிய இத்தேர்தல் முடிவுகளை ஆட்சேபித்து நீதிமன்றம் செல்லப்போவதாகவும் அநீதிக்கெதிராக மக்களை அணிதிரட்டப்போவதாகவும் தெரிவித்தார்.

மேலும் அரசாங்கத்தின் அராஜகச் செயற்பாடுகள் குறித்து சர்வதேச சமூகத்தின் உடனடிக் கவனத்திற்கு கொண்டுவருவதுடன், அதனொரு கட்டமாக இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களை தானும் ரணில் விக்கிரமசிங்கவும் சந்திக்கவிருப்பதாகவும் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது;

கிழக்கின் 3 மாவட்டங்களிலும் அமைச்சர்களும் குண்டர்களும் தமது அதிகார, ஆயுதப் பலத்தைப் பிரயோகித்து தேர்தல் மோசடியிலீடுபட்டனர். தமிழ் பிரதேசங்களிலிருந்து வாக்குச் சாவடிகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் ஆயுதப் பிரினர் கைப்பற்றி வாக்குப் பெட்டிகளை கள்ள வாக்குகளினால் நிரப்பினர்.

வாக்குச்சாவடிகளில் ஐ.தே.க.முகவராக தமிழர்கள் எவருமே செயற்பட அனுமதிக்கப்படவில்லை. தேர்தல் அதிகாரிகள் அமைச் சர்களுக்கும் ஆயுதங்களுக்கும் அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்தனர். பொலிஸார் பக்கச்சார்புடன் செயற்பட்டனர்.

பொலிஸ் அதிகாரிகள் தமது தொலைபேசி இணைப்புகளை துண்டித்துவிட்டு ஓடி ஒளித்திருந்தனர். பிரதியமைச்சர் பாயிஸினால் தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவசரமாக மூதூரிலிருந்து இடமாற்றப்பட்டுள்ளார்.

வாக்குச் சாவடிகளிலிருந்த அதிகாரிகள் வாக்குச்சீட்டுப் புத்தகங்களை அமைச்சர்களுக்கு அள்ளிக்கொடுத்து, கள்ளவாக்கு மோசடிக்கு உதவியுள்ளனர்.

இத்தனை அராஜகங்களுக்கு மத்தியிலும் மக்கள் எமக்கு ஆதரவு நல்கினர். தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் எமக்கு அதிகளவிலான மக்கள் ஆணைகிடைத்தது. எனவேதான் நான் உறுதியுடன் கூறுகிறேன். இத்தேர்தல் முடிவுகள் எமக்கு தோல்வியே அல்ல.

எனினும் இங்கு மாபெரும் அநீதி நிகழ்ந்துள்ளது. இதற்கெதிராக மக்களை அணி திரட்டிப் போராடுவோம். அக்கிரமம், மோசடி உள்ளிட்ட அராஜகங்களை கண்டித்து நீதிமன்றம் செல்வோம். எம்மிடம் சகல ஆதாரங்களுமேயுண்டு.

அராஜகத் தேர்தல் முடிவுகள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு முறையிடுவோம். இன்று ஐ.தே.க.தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கிக்கூறி அரசாங்கத்திற்கு அழுத்தம்கொடுக்க வலியுறுத்துவோம்.

முதலமைச்சர் பதவியை பகடைக் காயாகவும், தமிழ், முஸ்லிம் சமூகங்களை துருவப்படுத்தும் நடவடிக்கைக்கும் பயன்படுத்த முயற்சிகள் இடம் பெறும் சந்தர்ப்பம் உண்டு இதனையிட்டு கவலையடைகிறேன். தமிழ், முஸ்லிம் சமூகம் இது குறித்து போதிய விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் செயற்படுவது அவசியம்.

தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை கருதி கடந்த காலங்களில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டேன் சமூகங்களுக்கான எனது தியாகம் தொடரும் என்றார்.

Email this page Your Opinion Print this page
ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் தேர்தல் வன்முறை எதிரொலிக்கும் நிலை
பயங்கரவாதத்தை தோற்கடிக்க கிழக்கு மக்கள் வழங்கிய தெளிவான ஆணை
பிள்ளையானுக்கு அதிக விருப்பு வாக்கு ஹிஸ்புல்லாஹ் மூன்றாவது இடத்தில்
பிள்ளையானா? ஹிஸ்புல்லாவா? முதலமைச்சர் தீர்மானிப்பதில் அரசாங்கத்துக்கு புதிய சிக்கல்
சிறிய அசம்பாவிதங்களைத்தவிர சுமுகமான முறையில் வாக்களிப்பு
தேர்தல் முடிவை ஐ.தே.க. முழுமையாக நிராகரிப்பு
பிரபல பொருளியல் ஆசிரியர் வரதன் கொழும்பில் கடத்தப்பட்டார்
தேர்தல் முடிவை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்; முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு
திருமலை மாவட்டத்தில் தெரிவான 11 உறுப்பினர்கள்
ஆலி-எலை வங்கிக் கொள்ளை தொடர்பாக மூவர் பொலிஸாரால் கைது; வாகனமும் மீட்பு
சித்தன்கேணி வீடொன்றில் நகை பணம் திருட்டு
மாணவர்களின் சுதந்திரமான கல்விச் செயற்பாட்டை சீரழிக்கவோ இராணுவ மயப்படுத்தவோ வேண்டாம்
படையினருக்கு அதிர்ச்சி கொடுப்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதலே கப்பல் மூழ்கடிப்பு
வைத்திய கலாநிதி நவமலர் காலமானார்
புலிகள் வசம் ஐந்து விமானங்களிருப்பதாக புலனாய்வுத் துறையினர் தெரிவிப்பு
இரத்தினபுரி வைத்தியசாலை மரணங்கள் குறித்து சட்டமா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
ரஷ்யாவின் புதிய ஜனாதிபதிக்கு தொலைபேசி மூலம் மகிந்த வாழ்த்து
பாடநூல்களிலுள்ள குறைபாடுகளை தீர்க்க கல்வித்திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இராணுவ உத்தியோகத்தருக்கு நீதிவான் பிடியாணை
நிதி சேகரித்த அதிரடிப்படை வீரர் கைது
ஒரே இலக்கத்துடன் 3 வருடங்களாக ஓடிய 2 வாகனங்கள் கண்டுபிடிப்பு
தேர்தல் உத்தியோகத்தர்கள் சிறப்பான பணி படையினர் குவிக்கப்பட்டதால் மோசடிகள் தடுப்பு
கமநெகும திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மிகமோசமான வன்முறைகளும் வாக்குமோசடிகளும் இடம்பெற்றுள்ளது
பயங்கரவாத வன்முறைச் சம்பவங்களை அரசு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரங்கேற்றியுள்ளது
எகலியகொடயில் 123 கிலோ கஞ்சா மீட்பு சாரதி உட்பட இருவர் பொலிஸாரால் கைது
கொடக்கவெலயில் எலிக்காய்ச்சல் தீவிரம் முதியவர் மரணம், விழிப்புடனிருக்க அறிவுறுத்தல்
கண்டி திரித்துவக் கல்லூரி அதிபரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பணிப்பு
கம்பஹாவில் தேடுதல் எட்டு தமிழர்கள் கைது
`புலிகள் தயாரித்த "சமாதானம்" ஷெல்களால் முகமாலையில் படையினருக்கு பலத்த இழப்பு'
புறக்கோட்டை கதிரேசன்வீதியில் ஆயுதபாணிகளால் மூன்று தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டதாக முறையீடு
40க்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயற்பாடு
கிழக்கு தேர்தலில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி. கண்டனம்
பிரதியமைச்சரின் தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி உடனடியாக இடமாற்றம்
பெற்ற குழந்தையை 12,000 ரூபாவுக்கு விற்ற தாயும் மேலும் இருவரும் கைது
கல்வியின் மூலமே எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியுமென்ற நோக்குடனே மகிந்தானந்த அபிவிருத்தி நிதியம் அங்குரார்ப்பணம்
பெருந்தோட்டப்புற ஆசிரியர்கள் 500 பேருக்கு குறுங்கால பயிற்சி நெறி
வாக்களிப்பில் வன் முறையாளருக்கு வெற்றி ஆயுதக் குழு, காடையர்கள் பகிரங்க செயற்பாடு
கிழக்கு மாகாணசபை நிர்வாகத்தை அரசு கைப்பற்றியதன் மூலம் அபிவிருத்திக்கு சந்தர்ப்பம்
பதுளையில் திடீர் தேடுதல் 7 பேர் கைது
விரலிப்பத்தனை ஆலய உற்சவத்தில் அன்னதானம் உட்கொண்ட 500 பேர் பாதிப்பு
ஊடகவியலாளர் வீட்டில் கொள்ளை நாவலப்பிட்டி பொலிஸில் முறையீடு
ஜே.வி.பி.யின் பிளவால் ஐ.தே.க. வின் ஆட்சி மலர வழி திறந்திருப்பதாக மகிழ்ச்சி
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் சமர்ஹில் தோட்ட தமிழ் இளைஞர் 4 பேர் கைது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com