Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Monday, May 12, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
பிள்ளையானா? ஹிஸ்புல்லாவா? முதலமைச்சர் தீர்மானிப்பதில் அரசாங்கத்துக்கு புதிய சிக்கல்
[12 - May - 2008] [Font Size - A - A - A]
* கிழக்கு வெற்றிக்காக படையினருக்கு பசில் வீரவணக்கம்

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலமைச்சர் தெரிவில் மூன்று முக்கிய விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

சுதந்திர முன்னணி சார்பில் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் சார்பில் பிள்ளையானும் ஹிஸ்புல்லாவும் முதலமைச்சர் வேட்பாளர்களாக பிரேரிக்கப்பட்டிருந்தனர். வாக்களிப்பு முடிவுகளின் அடிப்படையில் பிள்ளையான் 41 ஆயிரத்து 936 வாக்குகளையும் ஹிஸ்புல்லா 35 ஆயிரத்து 949 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.சுதந்திர முன்னணி தேர்தல் பிரசார காலத்தில் தமது கட்சிசார்பில் யார் கூடிய வாக்குகளைப் பெறுகிறாரோ (பிள்ளையான் அல்லது ஹிஸ்புல்லா) அவர்களே முதலமைச்சர் எனப் பிரசாரம் செய்தது.

அத்துடன் சுதந்திர முன்னணி சார்பில் எந்த சமூகப் பிரதிநிதிகளுக்கு அதிக ஆசனங்கள் கிடைக்கிறதோ அவர்களின் சமூகத்தவரே முதலமைச்சரெனவும் இருவகையான பிரசாரங்களையும் முன்னெடுத்திருந்தது.

முஸ்லிம்கள் அதிக பிரதிநிதிகளையும் பிள்ளையான் அதிக விருப்பு வாக்குகளையும் பெற்றிருக்கும் நிலையில், யாருக்கு முதலமைச்சர் பதவி வழங்குவதென்ற புதுச்சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கி சர்வதேச மட்டத்தில் புலிகளுக்கெதிரான பிரசாரத்தை தீவிரப்படுத்த அரசாங்கம் முயலுமெனவும் தீவிர சிங்கள கடும் போக்குக்கட்சியும் ஆளும் கூட்டணியின் பங்காளியுமான ஜாதிக ஹெல உறுமய, பிள்ளையானே முதலமைச்சராக தெரிவு செய்யப்பட வேண்டுமென பிரசாரம் செய்தநிலையில், அவர் முதலமைச்சராகுவதையே அக்கட்சி விரும்புவதாகவே தெரிவிக்கப்படுகிறது.

மேலும் ஆளும் தரப்பு வெற்றிக்கு ஹிஸ்புல்லாவை விட பிள்ளையானே பெரும் பங்காற்றியுள்ளதாகவும் சிலர் சுட்டிக்காட்டினர்.

ஆனாலும் அரசின் 3 பங்காளி முஸ்லிம் கட்சிகள் ஹிஸ்புல்லா முதலமைச்சராக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளன.

முதலமைச்சர் பதவிப் பகிர்வு போலவே மாகாண அமைச்சுப் பதவிகளிலும் சிக்கல் தீவிரமடையுமென அறியவரும் நிலையில் சிலர் பிள்ளையானுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் தலா இரண்டரை வருட காலம் முதலமைச்சர் பதவியை வழங்கலாமெனவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி பசில் ராஜபக்ஷ எம்.பி.யுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது;

"கிழக்கின் முதலமைச்சர் யார் என்பதை நாம் இதுவரை தீர்மானிக்கவில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் முன்னணி சார்பில் வெற்றியீட்டிய உறுப்பினர்களின் ஆலோசனையுடன், இவர்களையும் கவனத்திலெடுத்து முதலமைச்சரை தீர்மானிப்போம்" என்றார்.

அத்துடன் ரணில், பிரபா, ஹக்கீம் கூட்டணி இத்தேர்தலில் மண் கௌவியுள்ளதாகவும் அவர்கள் கிழக்கு மக்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கிலிருந்து புலிகளை விரட்டி அங்கு ஜனநாயகத் தேர்தலை நடத்த காரணமாகமைந்த முப்படையினருக்கு அரசாங்கம் வீர வணக்கம் செலுத்துவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Email this page Your Opinion Print this page
ஐ.நா.மனித உரிமை பேரவையிலும் தேர்தல் வன்முறை எதிரொலிக்கும் நிலை
பயங்கரவாதத்தை தோற்கடிக்க கிழக்கு மக்கள் வழங்கிய தெளிவான ஆணை
பிள்ளையானுக்கு அதிக விருப்பு வாக்கு ஹிஸ்புல்லாஹ் மூன்றாவது இடத்தில்
பிள்ளையானா? ஹிஸ்புல்லாவா? முதலமைச்சர் தீர்மானிப்பதில் அரசாங்கத்துக்கு புதிய சிக்கல்
சிறிய அசம்பாவிதங்களைத்தவிர சுமுகமான முறையில் வாக்களிப்பு
தேர்தல் முடிவை ஐ.தே.க. முழுமையாக நிராகரிப்பு
பிரபல பொருளியல் ஆசிரியர் வரதன் கொழும்பில் கடத்தப்பட்டார்
தேர்தல் முடிவை ஆட்சேபித்து நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்; முஸ்லிம் காங்கிரஸ் அறிவிப்பு
திருமலை மாவட்டத்தில் தெரிவான 11 உறுப்பினர்கள்
ஆலி-எலை வங்கிக் கொள்ளை தொடர்பாக மூவர் பொலிஸாரால் கைது; வாகனமும் மீட்பு
சித்தன்கேணி வீடொன்றில் நகை பணம் திருட்டு
மாணவர்களின் சுதந்திரமான கல்விச் செயற்பாட்டை சீரழிக்கவோ இராணுவ மயப்படுத்தவோ வேண்டாம்
படையினருக்கு அதிர்ச்சி கொடுப்பதற்காக நடத்தப்பட்ட தாக்குதலே கப்பல் மூழ்கடிப்பு
வைத்திய கலாநிதி நவமலர் காலமானார்
புலிகள் வசம் ஐந்து விமானங்களிருப்பதாக புலனாய்வுத் துறையினர் தெரிவிப்பு
இரத்தினபுரி வைத்தியசாலை மரணங்கள் குறித்து சட்டமா அதிபருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்
பாகிஸ்தானிலிருந்து நாடு திரும்பிய இராணுவத் தளபதி வவுனியா விஜயம்
ரஷ்யாவின் புதிய ஜனாதிபதிக்கு தொலைபேசி மூலம் மகிந்த வாழ்த்து
பாடநூல்களிலுள்ள குறைபாடுகளை தீர்க்க கல்வித்திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இராணுவ உத்தியோகத்தருக்கு நீதிவான் பிடியாணை
நிதி சேகரித்த அதிரடிப்படை வீரர் கைது
ஒரே இலக்கத்துடன் 3 வருடங்களாக ஓடிய 2 வாகனங்கள் கண்டுபிடிப்பு
தேர்தல் உத்தியோகத்தர்கள் சிறப்பான பணி படையினர் குவிக்கப்பட்டதால் மோசடிகள் தடுப்பு
கமநெகும திட்டத்தின் கீழ் 15 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டம்
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மிகமோசமான வன்முறைகளும் வாக்குமோசடிகளும் இடம்பெற்றுள்ளது
பயங்கரவாத வன்முறைச் சம்பவங்களை அரசு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரங்கேற்றியுள்ளது
எகலியகொடயில் 123 கிலோ கஞ்சா மீட்பு சாரதி உட்பட இருவர் பொலிஸாரால் கைது
கொடக்கவெலயில் எலிக்காய்ச்சல் தீவிரம் முதியவர் மரணம், விழிப்புடனிருக்க அறிவுறுத்தல்
கண்டி திரித்துவக் கல்லூரி அதிபரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு பணிப்பு
கம்பஹாவில் தேடுதல் எட்டு தமிழர்கள் கைது
`புலிகள் தயாரித்த "சமாதானம்" ஷெல்களால் முகமாலையில் படையினருக்கு பலத்த இழப்பு'
புறக்கோட்டை கதிரேசன்வீதியில் ஆயுதபாணிகளால் மூன்று தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டதாக முறையீடு
40க்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயற்பாடு
கிழக்கு தேர்தலில் ஜனநாயகத்தின் குரல்வளை நெரிக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பி. கண்டனம்
பிரதியமைச்சரின் தாக்குதலில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி உடனடியாக இடமாற்றம்
பெற்ற குழந்தையை 12,000 ரூபாவுக்கு விற்ற தாயும் மேலும் இருவரும் கைது
கல்வியின் மூலமே எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியுமென்ற நோக்குடனே மகிந்தானந்த அபிவிருத்தி நிதியம் அங்குரார்ப்பணம்
பெருந்தோட்டப்புற ஆசிரியர்கள் 500 பேருக்கு குறுங்கால பயிற்சி நெறி
வாக்களிப்பில் வன் முறையாளருக்கு வெற்றி ஆயுதக் குழு, காடையர்கள் பகிரங்க செயற்பாடு
கிழக்கு மாகாணசபை நிர்வாகத்தை அரசு கைப்பற்றியதன் மூலம் அபிவிருத்திக்கு சந்தர்ப்பம்
பதுளையில் திடீர் தேடுதல் 7 பேர் கைது
விரலிப்பத்தனை ஆலய உற்சவத்தில் அன்னதானம் உட்கொண்ட 500 பேர் பாதிப்பு
ஊடகவியலாளர் வீட்டில் கொள்ளை நாவலப்பிட்டி பொலிஸில் முறையீடு
ஜே.வி.பி.யின் பிளவால் ஐ.தே.க. வின் ஆட்சி மலர வழி திறந்திருப்பதாக மகிழ்ச்சி
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் சமர்ஹில் தோட்ட தமிழ் இளைஞர் 4 பேர் கைது
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com