Thinakkural Tamil News Paper - The Independent Voice in Tamil

The Independent Voice in Tamil
Friday, September 05, 2008


Download latha tamil font
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
  Sri Lanka Forecast
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
HOT NEWS
Important News
வடக்கில் விரைவில் தேர்தலின்பின் மாகாண சபை அரசியல் நிர்வாகம்
[05 - September - 2008] [Font Size - A - A - A]
* வடமத்தி, சப்ரகமுவ முதலமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி

-டிட்டோகுகன்-

வடக்கில் விரைவில் தேர்தல் நடத்தப்பட்டு மாகாணசபை ஸ்தாபிக்கப்படுமெனவும் அரசியல் நிர்வாகம் ஏற்படுத்தப்படுமெனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு பின்னர் பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபை ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ள நிலையில், 9 ஆவது மாகாண சபை நீண்ட காலம் செல்வதற்குள் ஸ்தாபிக்கப்படுமெனவும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார். ஜனாதிபதி செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற, வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

அவர் இங்கு மேலும் பேசுகையில்;

வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபை தேர்தல் வெற்றியின் மூலம் அப் பிரதேசங்களின் மக்கள் அரசாங்கம் செல்லும் பாதை தெளிவானதென எடுத்துக் காட்டியுள்ளனர். எனவே, எமது பயணத்தை மேலும் பலத்துடன் முன்னெடுத்துச் செல்ல முடியுமென்ற நம்பிக்கை எமக்கிருக்கிறது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எமது, இந்த வெற்றியை சகித்துக் கொள்ள முடியவில்லை. தோல்வியுற்றதும் அந்தக் கட்சிக்காரர்கள் எதை எதையோ கூறி புலம்புகிறார்கள். எனினும் இந்தத் தேர்தல் மிகவும் நேர்மையாக நடைபெற்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

விருப்பு வாக்கு தேர்தல் முறைமையில் சில பிரச்சினைகள் இருக்கின்றன. எனவே, இந்த முறைமை தொடர்பாக நாம் மீண்டும் கவனம் செலுத்த வேண்டி ஏற்பட்டுள்ளது. தேர்தல் முறைமை தொடர்பாக ஆராய விஷேட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டை ஐக்கியப்படுத்த நாம் பெரும் போராட்டத்தை நடத்துகிறோம். இம் மாதிரியானதொரு சந்தர்ப்பத்தில் கட்சிகளுக்கிடையே முரண்பட்டுக்கொள்வதில் பலனில்லை. நாம் ஒருவருக்கொருவர் முரண்பட்டு, பிளவுபட்டு நின்றது போதும். எனவே, தேர்தல் காலத்தில் இருந்த போட்டி மனப்பான்மையை மறந்து, நாட்டையும், பிரதிநிதித்துவப்படுத்தும் மாகாணங்களையும் கட்டியெழுப்ப பாடுபட வேண்டும்.

இன்று எவ்வளவு செய்தாலும் அவற்றை விமர்சிப்பதற்கென்றால் பலரும் இருக்கின்றனர். செய்யாததொன்றை தேடிப் பிடித்து, குறை சொல்வார்கள். அதைக் கண்டு சலிப்படைந்து விடக்கூடாது. அந்தக் குறைபாடுகளை காண்பிப்பது கடமையென நினைத்துக் கொண்டு நாம் அவற்றைப் பூர்த்தி செய்து, கொடுக்க வேண்டும்.

மக்களின் மத்தியில் சென்று பணியாற்றும் போது மட்டுமே தேர்தலுக்கு முகம் கொடுக்கக் கூடியதாக இருக்கும். நாம் மக்கள் மத்தியில் இருந்தால் இந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியும்.

நாம், கிழக்கு மாகாணத்தை வெற்றி பெற்று அங்குள்ள மக்களுக்கு ஜனநாயக உரிமையை வழங்கினோம். பல வருடங்களாக பயங்கரவாதிகளின் துப்பாக்கிகளுக்கு அடிமைப் படுத்தப்பட்டிருந்த மக்களுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்தோம். கிழக்கைப் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்டு அங்கு மாகாண சபையையும் ஸ்தாபித்தோம். இதேபோல் 9 ஆவது மாகாண சபையையும் வெகு காலம் செல்வதற்குள் நாம் ஸ்தாபிப்போம்.

அதற்காக எமது படை வீரர்கள் உயிர்த்தியாகம் செய்து போராடி வருகின்றனர். மக்களும் இந்த நாட்டைப் பற்றி சிந்தித்து, எப்போதும் வாக்களித்துள்ளனர். அந்த மக்களை நாம் கௌரவப்படுத்த வேண்டும். நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அந்தப் பயணத்தைப் பொறுப்புடன் மேற்கொள்ளும் கடமை எமக்குள்ளது. இதற்கு மத்திய அரசாங்கமும் மாகாண சபைகளும் உள்ளூராட்சி மன்றங்களும் ஒருமித்து செயற்பட வேண்டியுள்ளது.

நாட்டில் பாராளுமன்றத்துக்கும் நீதிமன்றத்துக்கும் நிறைவேற்று அதிகாரத்துக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டால் நாடு வீழ்ச்சி கண்டுவிடும். நிறைவேற்று அதிகாரத்துக்கும் பாராளுமன்றத்துக்கும் மற்றும் நீதிமன்றத்துக்கும் இடையில் தொடர்பொன்று இருத்தல் அவசியம்.

நீதிமன்றத்தின் சுயாதீனத்துக்கு நாம் மதிப்பளிக்கிறோம். அதேபோல், பாராளுமன்றத்தின் பொறுப்புகளுக்கும் நாம் மதிப்பளிக்கிறோம். நாம் எப்போதுமே நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பளித்து செயற்படுகிறோம். நீதிமன்ற தீர்ப்புகள் தொடர்பில் நாம் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிப்பதில்லை. எந்தவொரு விடயமாவது நீதிமன்ற விசாரணையின் கீழ் இருக்கும் போது, நாம் அது பற்றிப் பாராளுமன்றத்தில் விவாதிப்பதில்லை.

அரசொன்றை கட்டியெழுப்ப நிறைவேற்று அதிகாரம், பாராளுமன்றம் மற்றும் நீதிமன்றம் ஆகிய மூன்றுக்கும் இடையில் சிறந்த தொடர்பொன்று இருக்க வேண்டுமென நாம் நம்புகிறோம்' என்றும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், இந்த வைபவத்தில் வடமத்திய மாகாண சபையின் முதலமைச்சராக பேர்டி பிரேமலால் திஸாநாயக்கவும் சப்ரகமுவ மாகாண சபையின் முதலமைச்சராக மஹிபால ஹேரத்தும் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.

Email this page Your Opinion Print this page
ஐ.ஈ.எல்.ரி.எஸ். பரீட்சைக்கான பதிவுகளை இலகுவாக்கியது பிரிட்டிஷ் கவுன்ஸில்
காணாமற் போனவர்கள் மீண்டும் திரும்பி வருவரென நம்பிக்கை
வன்னி அகதிகளின் நிலைமை; மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் கவலை
வடக்கில் விரைவில் தேர்தலின்பின் மாகாண சபை அரசியல் நிர்வாகம்
வன்னி மக்களின் பாதுகாப்பு, சுதந்திரமான நடமாட்டத்துக்கு இடமளிக்க வலியுறுத்தல் மனிதாபிமான அமைப்புகளின் இணையம் வேண்டுகோள்
யாழ்நகரில் மீண்டும் கொள்ளையர் அட்டகாசம்
மண்சரிவில் புதையுண்ட இரு தொழிலாளர்கள்
கிராண்ட்பாஸ் முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிலைகளை அடித்து நொருக்கி அட்டகாசம்
பணவீக்கம் என்றுமில்லாதவாறு அதிகரிப்பு ஒவ்வொரு பிரஜையும் ரூபா 1,75,000 கடனாளி
இந்துக் கோவில் சுவாமி சிலைகளை உடைத்த பிக்கு மீது ஜனாதிபதி, அஸ்கிரிய பீடாதிபதிகளின் நடவடிக்கை அவசியம்
புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தாக்கப்பட்டு படுகாயம், இருவர் கைது; கம்பளையில் சம்பவம்
புலிகளின் பிடியிலிருந்து தமிழ் மக்களை மீட்கும் மனிதாபிமான பணியில் படையினர்
வன்னி மக்களின் பாதுகாப்பை ஐ.நா.வே உறுதிப்படுத்த வேண்டும்
தோட்டப் பகுதி வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்பது தேர்தல் பிரசாரம்
மாத்தன்னை தோட்டக் குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்குவதில் இழுபறிநிலை; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
ஹல்தும்முல்லை நீட்வூட் பிரிவு தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது
கொட்டியாபுரப்பற்று இந்துசமய அபிவிருத்தி ஒன்றிய ஏற்பாட்டில் ஐந்து நாள் வேல் நடைப்பஜனை
மேல் மாகாண தோட்டப் பாடசாலை அபிவிருத்திக்கு 6 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு
யாழ்ப்பாணத்திற்கான பாடநூல் விநியோக ஆரம்ப வைபவம்
துப்பாக்கி தயாரிக்கும் நிலையம் கண்டுபிடிப்பு
வவுனியா வைத்தியசாலை கட்டிடத் திறப்பு விழா தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் புறக்கணிப்பு
அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யுத்தத்துக்கே பெருமளவு நிதி ஒதுக்க தீர்மானம்
சடலம் அடையாளம் காணப்பட்டது
ஒரு இலட்சம் பீப்பாய் எரிபொருளை சுத்திகரிக்கும் நிலையம் ஈரான் அரசின் உதவியுடன் நிர்மாணிக்கப்படும்
வேலைவாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும் அதற்கு செல்வதற்கு பல் வைத்தியர்கள் தயாரில்லை
கிளைமோர் தாக்குதலில் படை வீரர் உயிரிழப்பு
சட்ட உதவி நிலையங்களூடாக வறிய மக்கள் நன்மையடைய முடியும்
குடாநாட்டு பாடசாலைகளுக்கு கப்பல் மூலம் இன்று 6,14,974 பாடப் புத்தகங்கள் அனுப்பப்படுகிறது
கிணற்றில் விழுந்து மாணவன் மரணம்
வலிகாமம் மேற்குப் பிரதேசத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு
முகாமைத்துவ உதவியாளர் பரீட்சைக்கு தோற்றமுடியாத யாழ். பரீட்சார்த்திகள்
பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எந்த வைத்தியசாலையையும் அபிவிருத்தி செய்யமுடியாது
"ஹெல்பேச்' அரச சார்பற்ற நிறுவனத்தால் பாதிப்புற்றோருக்கு இலவச வைத்தியசேவை
26 வருடங்களாக கைவிடப்பட்ட காணிகளில் மீண்டும் விவசாயம் செய்ய நடவடிக்கை
நாட்டில் உருவாகியுள்ள ஆயுத கலாசாரத்தினால் மக்களுக்கிடையே ஒற்றுமையின்மை அதிகரிப்பு
ஊவா மாகாண சபையின் அதிகாரத்தை எதிர்வரும் தேர்தலிலும் அரசு கைப்பற்றும்
 
 
 
   
 
 
   
Home - Important News - Foreign News - Sports News - Sinhala News - Articles - Editorial - DR - Cartoon - Archives - Obituaries
© 2008. All Rights Reserved. Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com